வழிபாடு

சிறியசேஷ வாகன வீதிஉலா நடந்தபோது எடுத்தபடம்.

பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: சிறிய சேஷ, ஹம்ச வாகனங்களில் கல்யாண வெங்கடேஸ்வரர் உலா

Published On 2023-02-13 06:43 GMT   |   Update On 2023-02-13 06:43 GMT
  • நடன கலைஞர்களின் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது.
  • இன்று சிம்ம, முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடக்கிறது.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் கையில் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு 'முரளி கிருஷ்ணர்' அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகனத்துக்கு முன்னால் நடன கலைஞர்களின் கோலாட்டங்கள், பஜனைகள் நடந்தது. மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவர்களான கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கல்யாண வெங்கடேஸ்வரர் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடக்கிறது.

Tags:    

Similar News