வழிபாடு

முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

Published On 2022-09-12 05:13 GMT   |   Update On 2022-09-12 05:13 GMT
  • அன்னையின் புகழ்மாலை, ஜெபமாலை, திருப்பலி நடந்தது.
  • கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் குடும்ப பெருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் அன்னையின் புகழ்மாலை, ஜெபமாலை, திருப்பலி நடந்தது.

விழாவின் இறுதி நாளான நேற்று காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, 9 மணிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் அருட்தந்தை சேவியர் பெனடிக் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது.

மருதன்கோடு பங்கு அருட்தந்தை ஜான்சேவியர் அருளுரை வழங்கினார். தொடர்ந்து 11 மணிக்கு மலையாள மொழியில் திருப்பலி, அன்னையின் தேர் பவனி, மாலை 6 மணிக்கு அருட்தந்தை அருள் தலைமையில் திருப்பலி, கொடி இறக்கம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News