வழிபாடு

பனை மரம் இல்லாத ஏரி

Published On 2023-08-14 12:07 IST   |   Update On 2023-08-14 12:07:00 IST
  • பனை மரமே முளைக்காமல் போகட்டும் என்று சாபமிட்டு விடுகிறார்.
  • ஏரியின் கரையில் பனை மரங்களை காண முடியாது.

திருவண்ணாமலை குளத்தில் உள்ள தீர்த்தத்தில் மூழ்கியவுடன் பார்வதிதேவி, வயதான தோற்றம் மறைந்து பழைய உருவத்தை அடைகிறார். பின்பு அங்கிருந்து கிழக்கு பக்கமாக மேல்மலையனூருக்கு வருகிறார். அப்போது இரவு ஆகி விடுகிறது.

எனவே மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் தென்மேற்கு பகுதியில் உள்ள தாயனூர் என்ற ஊரில் 400 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியின் கரையில் பார்வதி தங்கி விடுகிறார்.

அப்போது அவருடன் வந்த பூதகணங்கள் பசி எடுப்பதாக பார்வதியிடம் கூறுகின்றன. அங்குள்ள ஏரியில் உள்ள பனை மரத்தில் அங்கிருந்த மக்கள் பதநீர் இறக்கி கொண்டிருந்தனர். அதனை கேட்கிறார் பார்வதி. அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த பார்வதி, இங்குள்ள பனை மரங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும். அதுமட்டுமல்லாமல் இனிமேல் இங்கு பனை மரமே முளைக்காமல் போகட்டும் என்று சாபமிட்டு விடுகிறார். அதன்படி இன்று வரை இந்த ஏரியின் கரையில் பனை மரங்களை காண முடியாது.

அதேபோல் இந்த ஏரியில் அம்மன் குளித்து விட்டு வந்த போது அவரது மெட்டி காணாமல் போய் விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பார்வதி, இந்த ஏரியில் உயரமான புற்கள் (விழல்) வளராமல் போகட்டும் என்று சாபமிட்டதால் இன்றுவரை இந்த ஏரியில் உயரமாக புற்கள் வளருவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அய்யப்பன் கோவில்

அங்காள பரமேஸ்வரியின் உற்சவர் சன்னதிக்கு எதிரில் தர்மசாஸ்தா என்கிற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலை பற்றி செல்வராஜ் பூசாரி ஏழுமலை பூசாரி ஆகியோர் கூறும்போது, இங்கு வீற்றிருக்கும் தர்மசாஸ்தா என்கிற அய்யப்பன் உலோகத்தால் செய்யப்பட்ட18 படிகளின் மீது பீடத்தில் காட்சி அளிக்கிறார்.

சபரிமலையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின்போது இவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அதேபோல் கார்த்திகை மாதத்தில் இருந்து தை மாதம் மகர ஜோதி வரை இவருக்கு தினமும் அய்யப்ப பக்தர்களால் அபிஷேகமும், அலங்காரமும், சரணகோஷமும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். அம்மனை வணங்கும் பக்தர்கள் இவரையும் கும்பிட்டு விட்டுச் செல்கின்றனர் என்றனர்.

Tags:    

Similar News