வழிபாடு
ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கருடசேவை

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கருடசேவை

Published On 2022-05-24 06:43 GMT   |   Update On 2022-05-24 06:43 GMT
ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நவ திருப்பதி தலங்களில் முதல் திருப்பதி தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் கும்பாபிஷேக தினத்தில் வருஷாபிஷேக விழாவில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம், 10 மணிக்கு ஹோமம் நடைபெற்றது. 11 மணிக்கு பூர்ணாகுதி, 11.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 12 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி, மாலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் வாகனக்குறட்டிற்கு எழுந்தருளினார். 8.30 மணிக்கு கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்நிகழ்வில் நிர்வாக அதிகாரி கோவல மணி கண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி தலத்தார்கள் சீனிவாசன், ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன், தேவராஜன், திருவேங்கடத்தான், வேங்கட கிருஷ்ணன் ஆகி யோர் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News