வழிபாடு
மூவர் கண்டியம்மன் கோவில்

மூவர் கண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-04-25 09:08 IST   |   Update On 2022-04-25 09:08:00 IST
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. ராஜகோபுரம், கருவறை கோபுரம் பொலிவிழந்து காணப்படுகிறது.
குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டியில் பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது.

இப்பகுதியில் வரலாற்று ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வில், பல நூற்றாண்டுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டது.

இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. ராஜகோபுரம், கருவறை கோபுரம் பொலிவிழந்து காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில்,

‘சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோவிலை, புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்களிப்புடன் மராமத்து பணி மட்டும் குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்பட்டு வருகிறது. கோவிலை முழுமையாக புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

கோவில் தேரோட்டம் மீண்டும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Similar News