வழிபாடு
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 29-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான சூரியன் ஸ்தலமாக உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 7.15 மணிக்கு கோவில் கொடிப்பட்டம் நான்கு மாடவீதிகளில் சுற்றி வரப்பட்டது. இதனையடுத்து காலை 7.55 மணிக்கு கோவில் கொடிமரத்தில் அர்ச்சகர் ராமானுஜபட்டர் கொடியேற்றி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தங்கத்தோளுக்கினியானில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடந்தது. 2-ஆம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெறும். நாளை காலை 7.30 மணிக்கு சுவாமி தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, காலை 11 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அனுமார் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
வரும் 24-ந்தேதி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் சுவாமி வீதி உலா புறப்பாடு, மாலை 6 மணிக்கு ஷேச வாகனத்தில் சுவாமி வீதி உலா, 5-ஆம் திருவிழாவான 25-ந்தேதி காலை 9.30 மணிக்கு கள்ளபிரான் சுவாமி, காசினி வேந்தபெருமாள் சுவாமி, விஜயாசனப் பெருமாள், சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, இரவு 9 மணிக்கு குடவரை பெருவாயில் ஹம்ஸ வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர்சேவை நான்கு கருடவகனத்தில் ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி, ஸ்ரீபொலிந்துநின்றபிரான் சுவாமி, ஸ்ரீ காசினி வேந்த பெருமாள் சுவாமி, ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் சுவாமிகளின் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.
6-ஆம் திருவிழாவான 26-ந்தேதி காலை 5.30மணிக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம், காலை 7.30 மணிக்கு கள்ளபிரான் கோவிலுக்குள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டியும், மாலை 6 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 7-ஆம் திருவிழாவான 27-ந்தேதி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதியுலா புறப்பாடு, காலை 11 மணிக்கு நாச்சியார் சன்னதியில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி, மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு வீதி புறப்பாடு, இரவு 7 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் ஆண்டாள் திருக்கோலம் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறும்.
28-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடிமரம் சுற்றி எழுந்தருளல், இரவு 8.30மணிக்கு குதிரை வாகனத்தில் திருத்தேர் கடாச்ஷமும், 29-ந் தேதி காலை 4.30 மணிக்கு கொடிமரம் சுற்றி எழுந்தருளல், காலை 5மணிக்கு மேல் 5.45மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 7.15மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். நான்கு வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடையும். இரவு 9மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 30-ந்தேதி காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், மே 1-ந் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி சயன கொறட்டில் நடைபெறும்.
கோவில் திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத், பட்டர்கள் ரமேஷ், சீனு, வாசு, கோவில் ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, ஸ்ரீனிவான், சீனிவாசன். திருவேங்கடத்தான் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த 20-ந் தேதி காலை 7.20 மணிக்கு கோவிலில் தேங்காய் வாங்குதல், மற்றும் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருமுளைச் சாத்துதல், இரவு தோளுக்கினியானில் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.
இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு தங்கத்தோளுக்கினியானில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடந்தது. 2-ஆம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெறும். நாளை காலை 7.30 மணிக்கு சுவாமி தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, காலை 11 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அனுமார் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
வரும் 24-ந்தேதி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் சுவாமி வீதி உலா புறப்பாடு, மாலை 6 மணிக்கு ஷேச வாகனத்தில் சுவாமி வீதி உலா, 5-ஆம் திருவிழாவான 25-ந்தேதி காலை 9.30 மணிக்கு கள்ளபிரான் சுவாமி, காசினி வேந்தபெருமாள் சுவாமி, விஜயாசனப் பெருமாள், சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு, இரவு 9 மணிக்கு குடவரை பெருவாயில் ஹம்ஸ வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர்சேவை நான்கு கருடவகனத்தில் ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி, ஸ்ரீபொலிந்துநின்றபிரான் சுவாமி, ஸ்ரீ காசினி வேந்த பெருமாள் சுவாமி, ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் சுவாமிகளின் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது.
6-ஆம் திருவிழாவான 26-ந்தேதி காலை 5.30மணிக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம், காலை 7.30 மணிக்கு கள்ளபிரான் கோவிலுக்குள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டியும், மாலை 6 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், 7-ஆம் திருவிழாவான 27-ந்தேதி காலை 7.30 மணிக்கு தோளுக்கினியானில் வீதியுலா புறப்பாடு, காலை 11 மணிக்கு நாச்சியார் சன்னதியில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டி, மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு வீதி புறப்பாடு, இரவு 7 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் ஆண்டாள் திருக்கோலம் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறும்.
28-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடிமரம் சுற்றி எழுந்தருளல், இரவு 8.30மணிக்கு குதிரை வாகனத்தில் திருத்தேர் கடாச்ஷமும், 29-ந் தேதி காலை 4.30 மணிக்கு கொடிமரம் சுற்றி எழுந்தருளல், காலை 5மணிக்கு மேல் 5.45மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 7.15மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். நான்கு வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடையும். இரவு 9மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 30-ந்தேதி காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும், மே 1-ந் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளபிரான் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி சயன கொறட்டில் நடைபெறும்.
கோவில் திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத், பட்டர்கள் ரமேஷ், சீனு, வாசு, கோவில் ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, ஸ்ரீனிவான், சீனிவாசன். திருவேங்கடத்தான் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் செய்து வருகின்றனர். முன்னதாக கடந்த 20-ந் தேதி காலை 7.20 மணிக்கு கோவிலில் தேங்காய் வாங்குதல், மற்றும் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் திருமுளைச் சாத்துதல், இரவு தோளுக்கினியானில் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.