வழிபாடு
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத் திருவிழா

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத் திருவிழா

Published On 2022-04-19 12:41 IST   |   Update On 2022-04-19 12:41:00 IST
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 15-ந் தேதி நடந்தது. அன்று அதிகாலை முதலே பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, அக்னி காவடி, பறவைக் காவடி, வேல் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

விழாவில் நேற்று முன்தினம் காலையில் திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் அருகே உள்ள குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விடையாற்றி உற்சவமும், மண்டல அபிஷேகமும் நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிதம்பரம், கோவில் பரம்பரை அறங்காவலர் தலைவர் கணேசன் சங்கரன், கோவில் அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Similar News