வழிபாடு
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் தேரோட்டம்
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. 20-ந் தேதி திருவிழா முடிவடைந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. 10-ந் தேதி கொடியேற்றம் நடந்தது.
அதைத்தொடர்ந்து விநாயகர், வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரர் உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு, படி சட்டத்தில் சாமி வீதி உலா காட்சியும் நடந்தது.
அதேபோல் இடும்பன் வாகனம், பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில், வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் வீதி உலா வந்து நிலையை அடைந்தது. தேரில் வள்ளி-தேவசேனாவுடன் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. 20-ந் தேதி திருவிழா முடிவடைந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. 10-ந் தேதி கொடியேற்றம் நடந்தது.
அதைத்தொடர்ந்து விநாயகர், வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரர் உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு, படி சட்டத்தில் சாமி வீதி உலா காட்சியும் நடந்தது.
அதேபோல் இடும்பன் வாகனம், பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில், வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 9-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் வீதி உலா வந்து நிலையை அடைந்தது. தேரில் வள்ளி-தேவசேனாவுடன் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. 20-ந் தேதி திருவிழா முடிவடைந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.