வழிபாடு
திருவள்ளூர் வீரராகவர் கோவில்

மாசி அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் இன்று மாலை தெப்பத்திருவிழா

Published On 2022-03-02 08:52 GMT   |   Update On 2022-03-02 08:52 GMT
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் 2 ஆண்டுக்கு பின் தற்போது தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று மாசி அமாவாசையையொட்டி திரளாக பக்தர்கள் குவிந்தனர்.

அவர்கள் இன்று அதிகாலை தங்களது முன் னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள் மற்றும் மூலவர் வீரராகவ பெருமாளை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு வீரராகவர் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு பின் தற்போது தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தெப்ப உற்சவத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தைச் சுற்றி வந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கட்சி அளிப்பார்.

இன்று இரவு திருவள்ளூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ராஜாஜிபுரம் காளமேகம் தெருவில் உள்ள ஓம் ஸ்ரீ பவானி அம்மன், ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவள்ளூரை அடுத்த புட்லூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஒதப்பை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மேல் நல்லாத்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News