வழிபாடு
மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு யானை மீது களப ஊர்வலம்

மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு யானை மீது களப ஊர்வலம்

Published On 2022-03-02 10:22 IST   |   Update On 2022-03-02 10:22:00 IST
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழாவின் 3-வது நாளில் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசிக்கொடை விழாவின் 3-வது நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கீழ்கரைபிடாகை சடையப்பர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து மதியம் 2 மணிக்கு யானை மீது களப ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் உண்ணிகிருஷ்ணன் கோவில் வழியாக மண்டைக்காடு பகவதி அம்மன் சன்னதியை அடைந்தது. அங்கு அம்மனுக்கு களபம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது.

மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8 மணிக்கு கதகளி, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனியும் நடந்தது.

ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் கம்பராமாயணம் தொடர் விளக்கவுரை, பக்தி பஜனை, பக்தி கான இசை, ஆன்மிக உரை, பரத நாட்டியம் மற்றும் சமய மாநாடு ஆகியவை நடைபெற்றது.

Similar News