வழிபாடு
பவானி கூடுதுறையில் புனித நீராடிய பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக பவானி கூடுதுறையில் புனித நீராடுவதற்கும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கூடுதுறையில் பவானி ஆறு, காவிரி ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி கலப்பதாக ஐதீகம்.
எனவே 3 நதிகள் சங்க மிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுடைய ஆசிர்வாதங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் பவானி கூடுதுறையில் புனித நீராடி, திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கு அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக பவானி கூடுதுறையில் புனித நீராடுவதற்கும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கூடுதுறையில் புனித நீராட அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் வழி காட்டு வழிமுறைகளை கடை பிடித்து வழிபாட்டு தலங்கள் திறக்கவும், நீர் நிலைகளில் புனித நீராடவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் பவானி கூடுதுறையில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசையையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலை முதலே பொதுமக்கள் வந்து கூடுதுறையில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத் தனர்.
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். காலை நேரத்தில் குறைந்த அளவே பக்தர்கள் வந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல பவானி கூடுதுறையில் கூட்டம் அலை மோதியது.
இதையொட்டி நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கைகளில் சானிடைவர் மூலம் கைகள் கழுவிய பிறகே அனு மதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து சென்றனர்.
மேலும் புனித நீராடிய பக்தர்கள் சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பவானி மற்றும் சித்தோடு போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியபடியே இருந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
இதேபோல் கொடு முடிக்கு இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். மேலும் பலர் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் பலர் காவிரி ஆற்றில் நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.
எனவே 3 நதிகள் சங்க மிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுடைய ஆசிர்வாதங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் பவானி கூடுதுறையில் புனித நீராடி, திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கு அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக பவானி கூடுதுறையில் புனித நீராடுவதற்கும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கூடுதுறையில் புனித நீராட அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் வழி காட்டு வழிமுறைகளை கடை பிடித்து வழிபாட்டு தலங்கள் திறக்கவும், நீர் நிலைகளில் புனித நீராடவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் பவானி கூடுதுறையில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசையையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலை முதலே பொதுமக்கள் வந்து கூடுதுறையில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத் தனர்.
ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். காலை நேரத்தில் குறைந்த அளவே பக்தர்கள் வந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல பவானி கூடுதுறையில் கூட்டம் அலை மோதியது.
இதையொட்டி நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கைகளில் சானிடைவர் மூலம் கைகள் கழுவிய பிறகே அனு மதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து சென்றனர்.
மேலும் புனித நீராடிய பக்தர்கள் சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பவானி மற்றும் சித்தோடு போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியபடியே இருந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
இதேபோல் கொடு முடிக்கு இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். மேலும் பலர் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் பலர் காவிரி ஆற்றில் நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.