திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் பணியாளர்கள் பிச்சையா, மணியம் பாஸ்கர், நாகராஜன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி தினசரி அம்மன் உலா கோவில் உள்பிரகாரத்தில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.