வழிபாடு
நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளிய காட்சி. (உள்படம்: பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்)

தைத்தேரோட்ட உற்சவம் நிறைவு: ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளினார்

Published On 2022-01-20 05:12 GMT   |   Update On 2022-01-20 05:12 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்ட உற்சவம் நிறைவு பெற்றது. ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திரைவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது. தைத் தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் கடந்த 17-ந் தேதி நடைபெற வேண்டும்.

தேரோட்டத்தின்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடையும்.

ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் தைத்தேரோட்டத்திற்கு பதிலாக நிலை தேர் உற்சவமாக நடைபெற்றது. உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று முன்தினம் சப்தாவரணம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார்.

இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 3.30மணிக்கு ரெங்க விலாச மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு கோவில் வளாகத்தில் உலாவந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தைத்தேர் உற்சவம் நிறைவு பெற்றது.

Tags:    

Similar News