வழிபாடு
அதிகாலையில் நடந்த கவிசித்தேஸ்வரா தேரோட்டம்
கவிசித்தேஸ்வரா கோவில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதில் பலரும் முககவசம் அணியாமலும், சமூகவிலகலை கடைப்பிடிக்காமல் குவிந்திருந்தனர்.
கொப்பல் (மாவட்டம்) டவுனில் கவிசித்தேஸ்வரா மடம் உள்ளது. இங்குள்ள கவிசித்தேஸ்வரா கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2021) தேரோட்டம் பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்திலேயே எளிமையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கவிசித்தேஸ்வரா கோவில் தேரோட்டம் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கூட்டமாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை நடந்த தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதில் பலரும் முககவசம் அணியாமலும், சமூகவிலகலை கடைப்பிடிக்காமல் குவிந்திருந்தனர்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2021) தேரோட்டம் பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்திலேயே எளிமையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கவிசித்தேஸ்வரா கோவில் தேரோட்டம் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கூட்டமாக பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை நடந்த தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதில் பலரும் முககவசம் அணியாமலும், சமூகவிலகலை கடைப்பிடிக்காமல் குவிந்திருந்தனர்.