வழிபாடு
இசக்கியம்மன்

இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை நடக்கிறது

Published On 2021-12-27 14:06 IST   |   Update On 2021-12-27 14:06:00 IST
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (மேற்கு) இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாயத்திற்கு சொந்தமான ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (மேற்கு) இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

நாளை காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல விதமான ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு பல வகையான அபிஷேகங்கள், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், மதியம் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Similar News