ஆன்மிகம்
திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நிறைவு

Published On 2021-11-30 10:20 IST   |   Update On 2021-11-30 10:20:00 IST
இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் கடந்த 19-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

அன்றில் இருந்து தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும்.

11-வது நாளான நேற்றுடன் மகா தீபம் தரிசனம் நிறைவு பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.

Similar News