ஆன்மிகம்
வெள்ளாழ வீதிசண்முக வேலாயுத சுவாமிகள் குருபூஜை

வெள்ளாழ வீதிசண்முக வேலாயுத சுவாமிகள் குருபூஜை

Published On 2021-11-25 06:57 GMT   |   Update On 2021-11-25 06:57 GMT
சண்முக வேலாயுத சுவாமிகளின் 113-வது குருபூஜை விழாவை முன்னிட்டு நந்திகேஸ்வரர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் இந்திர ஞான தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
புதுச்சேரி வெள்ளாழ வீதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில் சமாதி கொண்டுள்ள நாடு சண்முக வேலாயுத சுவாமிகளின் 113-வது குருபூஜை விழா 5 நாட்கள் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளில் குருபூஜை வேள்வி, கலச வழிபாடு, புனிதநீர் வழிபாடு, பேரொளி வழிபாடு, மகேஸ்வர பூஜை, அன்னம் பாலிப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்று மாலை நந்திகேஸ்வரர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திவான் கந்தப்பா குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்திர ஞான தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நந்திகேஸ்வரர், மணக்குள விநாயகருக்கு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய குரு மகா சன்னிதானம் சுவாமிகள் முன்னிலையில் நாடு சண்முக வேலாயுத சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News