ஆன்மிகம்
எஸ்.வாழவந்தி புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

எஸ்.வாழவந்தி புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

Published On 2021-11-23 07:05 GMT   |   Update On 2021-11-23 07:05 GMT
புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேஷகம் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் உள்ள புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சிறப்பு யாகம், 108 சங்காபிசேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேஷகம் செய்யப்பட்டது.

இதையடுத்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News