ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி சோமவார பூஜை

Published On 2021-11-13 08:30 GMT   |   Update On 2021-11-13 08:30 GMT
திருவோண நட்சத்திரமும், சப்தமி திதியும் சேர்ந்து ஒரேநாளில் ஒன்றாக வந்ததால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி சோமவார பூஜை நிகழ்ச்சி நடந்தது.
தெலுங்கு கார்த்திகை மாதத்தில் மகாவிஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்துடன் வரும் சப்தமி திதி நாள் அன்று கோடி சோம வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் திருவோண நட்சத்திரமும், சப்தமி திதியும் சேர்ந்து ஒரேநாளில் ஒன்றாக வந்ததால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கோடி சோமவார பூஜை நிகழ்ச்சி நடந்தது.

அதையொட்டி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பல வண்ண மலர்களால் மகாசிவலிங்கம் வடிவமைத்து, அதன் மீது தீபம் ஏற்றி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோவிலில் உள்ள கண்ணாடி மண்டபம் அருகில் பஞ்ச தீப ஸ்தம்பம் ஏற்பாடு செய்து, அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

முக்கிய விருந்தினராக பங்கேற்ற வேமிரெட்டி பிரபாகர்ரெட்டி எம்.பி. தம்பதியினர் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் ஏற்பாடு செய்திருந்த தீபங்களை ஏற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியினர் மற்றும் அதிகாரிகள் பலவண்ண மலர்கள் மீது வைத்திருந்த தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இதனால் தட்சிணாமூர்த்தி சன்னதி வளாகம் முழுவதும் தீப ஒளியில் ஒளிர்ந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News