ஆன்மிகம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் விழா உட்பிரகாரத்தில் நடந்தது

Published On 2021-07-10 11:34 IST   |   Update On 2021-07-10 19:07:00 IST
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசை விழாவான நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து விழாக்களும் நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. இருந்தாலும் ஆனி மாத அமாவாசை விழாவான நேற்று காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பாரம்பரியம் மாறாமல் உட்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் மதுரகாளி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்னர் பூசாரிகள் பக்திப் பாடல்கள் பாடினர். அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னும் அசைந்தாடியபடி அருள்பாலித்தார். பக்தர்கள் அனுமதியின்றி சமூக இடைவெளியுடன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஊஞ்சல் உற்சவம் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Similar News