ஆன்மிகம்
விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்

விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்

Published On 2021-07-10 09:43 IST   |   Update On 2021-07-10 09:43:00 IST
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் அமைந்துள்ள விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு அரிசி, கோதுமை, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, கம்பு கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலையில் அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

 அதன்படி நேற்று ஆனி மாத அமாவாசையையொட்டி விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு அரிசி, கோதுமை, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, கம்பு கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Similar News