ஆன்மிகம்
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று அமாவாசை சிறப்பு பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை
மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
மேச்சேரியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதையொட்டி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் சேலம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தநிலையில் ஆனி மாத அமாவாசையையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக கோவில் செயல் அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஆனி மாத அமாவாசையையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக கோவில் செயல் அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.