ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்
தேவையின்றி வருபவர்களை கண்காணிக்க சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 230-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் அம்மனை அருகிலிருந்தே தரிசனம் செய்யலாம் என்று சிலர் ஆசை வார்த்தைகளை கூறி பணம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக அழைத்துச் செல்வதாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
இதனை தடுக்கும் வகையில் கோவில் இணை ஆணையர் கல்யாணி ஏற்பாட்டின்படி டிக்கெட் கொடுக்குமிடம், மூலஸ்தானம், கோவில் பின்வாசல் ஆகிய இடங்களில் அடிக்கடி கோவிலுக்கு வரும் நபர்கள் மற்றும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களின் முகங்களை கண்டறியும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இக்கோவிலில் 230-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தடுக்கும் வகையில் கோவில் இணை ஆணையர் கல்யாணி ஏற்பாட்டின்படி டிக்கெட் கொடுக்குமிடம், மூலஸ்தானம், கோவில் பின்வாசல் ஆகிய இடங்களில் அடிக்கடி கோவிலுக்கு வரும் நபர்கள் மற்றும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களின் முகங்களை கண்டறியும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இக்கோவிலில் 230-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.