ஆன்மிகம்
ஆதிசங்கரர் கோவிலில் சிறப்பு பூஜை

ஆதிசங்கரர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-07-09 07:27 IST   |   Update On 2021-07-09 07:27:00 IST
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ஆதிஅமரநாயகி உடனமர் ஆதிசங்கரர் கோவிலில் சந்தனம், பால் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே கோட்டூரில் ஆதிஅமரநாயகி உடனமர் ஆதிசங்கரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தையொட்டி சந்தனம், பால் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ஆதிசங்கரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Similar News