ஆன்மிகம்
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அமாவாசை நாளில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். எனவே தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) அமாவாசை நாளில் கோவிலுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அமாவாசை நாளில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். எனவே தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) அமாவாசை நாளில் கோவிலுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.