ஆன்மிகம்
விருத்தாசலம் விருத்தகிரீஷ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. அதன்படி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 70 நாட்களாக மூடப்பட்டு இருந்த கோவில்கள் கடந்த 5-ந்தேதி முதல் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டு, வருகின்றனர்.
அந்த வகையில் ஊரடங்கு தளர்வில் கோவில் திறக்கப்பட்ட பின்னர் முதல் பிரதோஷ பூஜை நேற்று கோவில்களில் நடைபெற்றது. இதில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. அதன்படி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் இன்றி நடந்து வந்த பிரதோஷ பூஜை நேற்று கோவிலில் உள்ள நூறுகால் மண்டத்தில் நிரம்பி இருந்த பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதேபோல், மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் சிவன் கோவில், முதனை முதுகுன்றீஸ்வரர், பாலக் கொள்ளை அழகேஸ்வரர், தேவஸ்தான கோபுராபுரம் ஆதிசக்தி ஈஸ்வரர், புலியூர் வீரசேகரர், தர்மநல்லூர் தர்மபுரீஸ்வரர், ராஜேந்திரப்பட்டினம் நீலகண்டேஸ்வரர் மற்றும் காவனூர், ஆலடி, சத்தியவாடி, கார்மாங்குடி, வடக்கு வெள்ளூர், மு.பரூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
அந்த வகையில் ஊரடங்கு தளர்வில் கோவில் திறக்கப்பட்ட பின்னர் முதல் பிரதோஷ பூஜை நேற்று கோவில்களில் நடைபெற்றது. இதில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. அதன்படி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் இன்றி நடந்து வந்த பிரதோஷ பூஜை நேற்று கோவிலில் உள்ள நூறுகால் மண்டத்தில் நிரம்பி இருந்த பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதேபோல், மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் சிவன் கோவில், முதனை முதுகுன்றீஸ்வரர், பாலக் கொள்ளை அழகேஸ்வரர், தேவஸ்தான கோபுராபுரம் ஆதிசக்தி ஈஸ்வரர், புலியூர் வீரசேகரர், தர்மநல்லூர் தர்மபுரீஸ்வரர், ராஜேந்திரப்பட்டினம் நீலகண்டேஸ்வரர் மற்றும் காவனூர், ஆலடி, சத்தியவாடி, கார்மாங்குடி, வடக்கு வெள்ளூர், மு.பரூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.