ஆன்மிகம்
கல்யாண சுப்பிரமணியருக்கு சிறப்பு மலர் அலங்காரம்

கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-07-07 08:48 IST   |   Update On 2021-07-07 08:48:00 IST
திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
நீண்ட நாட்களுக்குப் பின் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூரில் ஒவ்வொரு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றது.

இதேபோல் நேற்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

Similar News