ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராவணாசூர வத நிகழ்ச்சி இன்று நடக்கிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ராவணாசூர வத நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ராவணாசூரன் வதம் நிகழ்ச்சியை தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் தத்ரூபமாக செய்து காண்பிப்பார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் இன்று ராவணாசூர வத நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி இன்று வேதப் பண்டிதர்கள் யுத்த காண்டம் 109-வது பாடலில் இருந்து 114-வது பாடல் வரையிலும், 14- வது பாடலில் இருந்து 19-வது பாடல் வரையிலும் பாராயணம் செய்கிறார்கள்.
அதற்காக வசந்த மண்டபத்தில் அசோக வனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ராவணாசூரன் வதம் நிகழ்ச்சியை தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் தத்ரூபமாக செய்து காண்பிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்காக வசந்த மண்டபத்தில் அசோக வனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ராவணாசூரன் வதம் நிகழ்ச்சியை தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் தத்ரூபமாக செய்து காண்பிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.