ஆன்மிகம்
திருநீறு பிரசாதம்

அம்மன் சன்னிதியில் திருநீறு பிரசாதம்

Published On 2021-07-03 13:41 IST   |   Update On 2021-07-03 13:41:00 IST
திருவெண்ணீற்று உமையம்மை உடனாய சிவலோகத் தியாகர் ஆலய அம்மன் சன்னிதியில் விபூதியே முதன்மை பிரசாதமாக உள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது ஆச்சாள்புரம். இங்கு திருவெண்ணீற்று உமையம்மை உடனாய சிவலோகத் தியாகர் கோவில் இருக்கிறது.

இந்த ஆலயத்தில்தான் தனது மனைவி தோத்திரப் பூர்ணாம்பிகை (சொக்கியார்) மற்றும் உறவினர்களுடன் திருஞானசம்பந்தர் தன்னுடைய 16-வது வயதில் சிவஜோதியில் ஐக்கியமானார்.

இந்த திருமணத்திற்கு வந்த அனைவருக்கும், இத்தல அம்பாள் பாரபட்சமின்றி திருநீறு கொடுத்து ஜோதியினுள் புகச் செய்ததால், இந்த ஆலய அம்மன் சன்னிதியில் விபூதியே முதன்மை பிரசாதமாக உள்ளது.

Similar News