ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-07-03 11:02 IST   |   Update On 2021-07-03 11:02:00 IST
தேய்பிறை அஷ்டமியையொட்டி திருவாதவூர் சனீஸ்வர பகவான் கோவிலில் குபேர கால பைரவர், தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலபைரவர், எஸ்.ஆலங்குளம் கற்பகவிநாயகர் கோவிலில் கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

தேய்பிறை அஷ்டமியையொட்டி திருவாதவூர் சர்வமங்கள சனீஸ்வர பகவான் கோவிலில் குபேர கால பைரவர், தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலபைரவர், எஸ்.ஆலங்குளம் கற்பகவிநாயகர் கோவிலில் கால பைரவருக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

அதன் பின்னர் பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

கொரோனா பரவல் தொற்று காரணமாக கோவில் நடை அடைக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த வழிபாட்டில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Similar News