ஆன்மிகம்
கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை
வாடிப்பட்டி 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இந்த சிறப்பு பூஜையில் அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டு கால பைரவர் வெள்ளி கிரீட அலங்காரத்திலும், வடை மற்றும் ரோஜா, மல்லிகை மாலையோடும் அருள்பாலித்தார்.
மேலும் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி நடந்த பூஜையினை கோவில் நிர்வாகி கோபிநாத் செய்திருந்தார்.
இந்த சிறப்பு பூஜையில் அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டு கால பைரவர் வெள்ளி கிரீட அலங்காரத்திலும், வடை மற்றும் ரோஜா, மல்லிகை மாலையோடும் அருள்பாலித்தார்.
மேலும் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி நடந்த பூஜையினை கோவில் நிர்வாகி கோபிநாத் செய்திருந்தார்.