ஆன்மிகம்
சப்த கன்னிகள்

வேதத்தில் முக்கியமான எண்ணாக கருதப்படும் ‘7’

Published On 2021-07-01 13:23 IST   |   Update On 2021-07-01 13:23:00 IST
ஏழு என்பது, வேதத்தில் ஒரு முக்கியமான எண்ணாக கருதப்படுகிறது. ‘ஏழு’ என்பதற்கு ‘முழுமை’ அல்லது ‘பரிபூரணம்’ என்றும் பொருள்படும். ஏழாக அமைந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்..
சிரஞ்சீவிகள்

‘ஜீவித்தல்’ என்பதற்கு, ‘உயிர்வாழ்தல்’ என்று பொருள். ‘சிரஞ்சீவிகள்’ என்றால் ‘எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்’ என்று பொருள். அந்த வகையில் ஏழு பேர் சிரஞ்சீவிகளாக அறியப்படுகிறார்கள்.

* அனுமன்
* விபீஷணன்
* மகாபலி
* மார்க்கண்டேயர்
* வியாசர்
* அஸ்வத்தாமன்
* பரசுராமர்

சப்த கோடி மகா மந்திரங்கள்

‘சப்த’ என்றால் ‘ஏழு’ என்று பொருள். ‘கோடி’ என்றால் ‘முடிவு’ என்றும் பொருள் உண்டு. ஆக ஏழு சொற்களை கொண்டுள்ள உயர்ந்த மந்திரங்கள் ‘சப்த கோடி மகா மந்திரங்கள்’ எனப்படும்.

* நமஹ
* ஸ்வாஹா
* ஸ்வதா
* வவ்ஷட்
* வஷட்
* பட்
* ஹும்

சக்கரங்கள்

* மூலாதாரம் - ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருப்பது.
* ஸ்வாதிஷ்டானம் - பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது.
* மணிபூரகம் - தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது.
* அனாஹதம் - விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது.
* விஷுத்தி - தொண்டை குழியில்.
* ஆக்னா - புருவ மத்தியில்.
* சகஸ்ராரம் (அ) பிரம்மாரந்திரம் - உச்சந்தலையில், பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடத்தில் இருக்கிறது.

கொல்லும் கொடிய பாவங்கள்

* ஆணவம்
* சினம்
* பொறாமை
* காமம்
* பெருந்தீனி
* சோம்பல்
* பேராசை

சப்த ரிஷிகள்

* கவுதமர்
* பரத்வாஜர்
* விஸ்வாமித்ரர்
* ஜமதக்னி
* வசிஷ்டர்
* காசியபர்
* அத்ரி

சப்த கன்னிகள்

* அகல்யை
* சீதை
* திரவுபதி
* தாரை
* மண்டோதரி
* நளாயினி
* அருந்ததி

புண்ணிய நதிகள்

* கங்கை
* யமுனை
* கோதாவரி
* சரஸ்வதி
* நர்மதை
* சிந்து
* காவேரி

சப்த மண்டலங்கள்

* சூரிய மண்டலம்
* சந்திர மண்டலம்
* வாயு மண்டலம்
* வருண மண்டலம்
* நட்சத்திர மண்டலம்
* அக்கினி மண்டலம்
* திரிசங்கு மண்டலம்

சப்த ஸ்வரங்கள்

* ஷட்ஜம்
* ரிஷபம்
* காந்தாரம்
* மத்திமம்
* பஞ்சமம்
* தைவதம்
* நிஷாதம்

Similar News