ஆன்மிகம்
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆனி மாத சஷ்டி பூஜைகள் நடந்தன.
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆனி மாத சஷ்டி பூஜைகள் நடந்தன.
இதையொட்டி உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், தேன், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.
பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
இதையொட்டி உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், தேன், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.
பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.