ஆன்மிகம்
பாலதண்டாயுதபாணி சாமி

ஆனி மாத சஷ்டியையொட்டி பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-06-17 05:13 GMT   |   Update On 2021-06-17 05:13 GMT
மோகனூர் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சாமிக்கு பால், தயிர் மற்றும் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மகா தீபாராதனையும் நடந்தது.
ஆனி மாத சஷ்டியையொட்டி நேற்று நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதைத்தொடர்ந்து சாமிக்கு பால், தயிர் மற்றும் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மகா தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து சாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News