ஆன்மிகம்
நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் ரத உற்சவம்

நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் ரத உற்சவம்

Published On 2021-06-03 12:48 IST   |   Update On 2021-06-03 12:48:00 IST
கும்பகோணம் நாதன்கோவில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் பிரகார புறப்பாடு நடந்தது.
கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் ஜெகன்நாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் (மே) 24-ந் தேதி தொடங்கியது.

இதையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் பிரகார புறப்பாடு நடந்தது. விழாவில் திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், நெல் அளக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று கோவில் உள்பிரகாரத்தில் ரத உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரதத்தை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

Similar News