ஆன்மிகம்
திருக்காமீஸ்வரர் கோவிலில் நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை

திருக்காமீஸ்வரர் கோவிலில் நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை

Published On 2021-05-22 11:31 IST   |   Update On 2021-05-22 11:31:00 IST
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 6-ம் நாளில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
புதுவை வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை, திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவ தேர்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மத விழாக்களை நடத்தக் கூடாது என தடை விதித்துள்ளது.

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் 6-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.. கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

Similar News