ஆன்மிகம்
காசியில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலம், விஸ்வநாதர் கோவில் ஆகும். காசியை சிவபெருமானே உருவாக்கியதாக புராணங்கள் சொல்கின்றன.
காசியில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலம், விஸ்வநாதர் கோவில் ஆகும். காசியை சிவபெருமானே உருவாக்கியதாக புராணங்கள் சொல்கின்றன.
இந்தக் கோவிலில் சாயங்காலம் நடைபெறும் பூஜையின் போது, தீபாராதனைக்கு முன்பாக 108 வில்வ இலைகளைக் கொண்டு, சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்வார்கள்.
அந்த நூற்றி எட்டு வில்வ இலைகளிலும், சந்தனத்தைக் கொண்டு ‘ராமா’ என்று எழுதி, அதனையே அர்ச்சனை செய்கிறார்கள்.
ஹரியும், ஹரனும் ஒன்று என்பதை உணர்த்தும் விதமாக இப்படிச் செய்வதாக சொல்கிறார்கள்.