ஆன்மிகம்
கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவ விழா மூலவர் சன்னதி முன்பாக தொடங்கியது. இந்த விழாவில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
மதுரை அருகே உள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா இந்த வருடமும் கோவில் உள் பிரகாரத்திலேயே நடந்தது. இதைப் போலவே நேற்று நடந்த வைகாசி மாத வசந்த உற்சவ விழா இக்கோவிலின் மூலவர் சன்னதி முன்பாக தொடங்கியது.
இதில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இந்த விழாவில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து இந்த விழா கோவில் மூலவர் சன்னதியிலே நடைபெறுகிறது. மேலும் இந்த விழா வருகிற 26-ந் தேதி நிறைவு பெறுகிறது.
ஆண்டுதோறும் இக்கோவிலின் வசந்த மண்டபத்தில் 10 நாள் நடைபெறும் இந்த திருவிழா இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கோவில் உள் வளாகத்திலேயே நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.