ஆன்மிகம்
கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் ஊரடங்கால் திருவிழா ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கோவிலும் அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதற்கிடையே திருவிழா ரத்து செய்யப்பட்டாலும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் முதல் நாளில் காவல்துறை மண்டகப்படி நடைபெறுவது வழக்கம். அதனை கடைபிடிக்கும் விதமாக நேற்று காலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வெளியே நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே திருவிழா ரத்து செய்யப்பட்டாலும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் முதல் நாளில் காவல்துறை மண்டகப்படி நடைபெறுவது வழக்கம். அதனை கடைபிடிக்கும் விதமாக நேற்று காலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வெளியே நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.