ஆன்மிகம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் பூப்பல்லக்கில் உற்சவர் 3 சுற்றுகள் உலா

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் பூப்பல்லக்கில் உற்சவர் 3 சுற்றுகள் உலா

Published On 2021-05-18 05:48 GMT   |   Update On 2021-05-18 05:48 GMT
கெங்கையம்மன் கோவிலில் உற்சவரை பல்லக்கில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து கோவில் வளாகத்திலேயே குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுடன் 3 சுற்றுகள் உலா வந்து அருள்பாலித்தார்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா கொரோனா பரவலால் கோவில் வளாகத்திலேயே நடந்தது. அதையொட்டி நேற்று இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவரை பல்லக்கில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து கோவில் வளாகத்திலேயே குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுடன் 3 சுற்றுகள் உலா வந்து அருள்பாலித்தார். பூப்பல்லக்கை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மனும் சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், தர்ம கர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூப்பல்லக்கை காண வந்த பக்தர்களை தடுப்புகள் அமைத்து போலீசார் திருப்பி அனுப்பினர்.
Tags:    

Similar News