ஆன்மிகம்
திருப்பதியில் ஊரடங்கால் தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் தேதியை மாற்றிக் கொள்ளலாம்
திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 31-ந் தேதி முதல் மே 31-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
சித்தூர் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றுப்பரவல் 3 ஆயிரத்தை கடந்து வருகிறது. திருப்பதியில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது. அந்த நேரத்தில் மட்டுமே பஸ் மற்றும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கோவில் உண்டியல் வருமானமும் வெகுவாக சரிந்துள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்டில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் வர முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 2,141 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 1,005 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.17 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
சித்தூர் மாவட்டத்தில் நாள்தோறும் தொற்றுப்பரவல் 3 ஆயிரத்தை கடந்து வருகிறது. திருப்பதியில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படுகிறது. அந்த நேரத்தில் மட்டுமே பஸ் மற்றும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கோவில் உண்டியல் வருமானமும் வெகுவாக சரிந்துள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்டில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் வர முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 2,141 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 1,005 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.17 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.