ஆன்மிகம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த தீர்த்தவாரி
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று சித்திரை மாத அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நடந்தது. விழாவில் மேள தாளம் முழங்க அஸ்திரதேவர் 3 குளங்களில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
கோவில் அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் கலந்துகொண்டு தீர்த்தவாரி செய்து வைத்தார். விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
கோவில் அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் கலந்துகொண்டு தீர்த்தவாரி செய்து வைத்தார். விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.