ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்

Published On 2021-05-06 07:04 GMT   |   Update On 2021-05-06 07:04 GMT
கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை :

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி, திருமலை, திருச்சானூர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணியில் இருந்து காலை 6.30 மணிவரை சுப்ர பாதம், காலை 6 மணியில் இருந்து காாலை 8.30 மணிவரை சகஸ்ரமார்ச்சனை, நித்யார்ச்சனை, சுத்தி, முதல் மணி ஒலிக்கிறது.

காலை 8.30 மணியில் இருந்து பகல் 11 மணிவரை இலவச தரிசனம், காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணிவரை கல்யாண உற்சவம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பிரேக் தரிசனம், மதியம் 12 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை சுத்தி, 2-வது மணி ஒலிக்கிறது. மதியம் 12.45 மணியளவில் கோவில் நடை சாத்தப்படுகிறது.

மாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்படுகிறது. மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இலவச தரிசனம், மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 7.15 மணிவரை சுத்தி, இரவு மணி ஒலிக்கிறது. இரவு 7.15 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.

வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து காலை 5 மணி வரை சுப்ரபாதம், காலை 5 மணியில் இருந்து காலை 6.30 மணிவரை சஹஸ்ரநாமார்ச்சனை, நித்யார்ச்சனை, சுத்தி, முதல் மணி ஒலிக்கிறது. காலை 6.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை மூலவருக்கு அபிஷேகம், காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை அலங்காரம், காலை 9 மணியில் இருந்து பகல் 11.30 மணிவரை இலவச தரிசனம், காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை மூலவருக்கு கல்யாண உற்சவம், காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பிரேக் தரிசனம். மதியம் 12 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை சுத்தி, 2-வது மணி ஒலிக்கிறது. மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இலவச தரிசனம், மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணிவரை ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் உற்சவருக்கு அபிஷேகம், மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அலங்காரம், மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சுத்தி, இரவு மணி ஒலிக்கிறது. இரவு 7.15 மணியளவில் ஏகாந்த சேவை, கோவில் நடைசாத்தப்படுகிறது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க ேவண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News