ஆன்மிகம்
மணப்பள்ளி வரதராஜபெருமாள் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை

மணப்பள்ளி வரதராஜபெருமாள் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை

Published On 2021-05-06 04:04 GMT   |   Update On 2021-05-06 04:04 GMT
மணப்பள்ளி வரதராஜபெருமாள் கோவிலில் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பின்னர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மோகனூரை அடுத்த மணப்பள்ளியில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களின்றி தினமும் சாமிக்கு பூஜைகள், அபிஷேகம் நடந்து வருகிறது.

இந்தநிலையில் உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரசில் இருந்து விடுபட வேண்டியும் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பின்னர் வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
Tags:    

Similar News