ஆன்மிகம்
மருதமலை முருகன் கோவில்

கொரோனா பரவல் எதிரொலி: மருதமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

Published On 2021-04-13 08:05 GMT   |   Update On 2021-04-13 08:05 GMT
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மருதமலை முருகன் கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவில் அடிவாரத்தில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மருதமலை முருகன் கோவிலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவில் அடிவாரத்தில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

அதில், மருதமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் மலைப்பாதையில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News