ஆன்மிகம்
நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

Published On 2021-03-23 10:30 IST   |   Update On 2021-03-23 10:30:00 IST
மண்டைக்காடு அருகே நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
மண்டைக்காடு அருகே நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.

அம்மாச்சியார் பொட்டல் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து யானை மீது திருக்கொடி கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் குமாரதாஸ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்யாணசுந்தரம், மனோகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News