ஆன்மிகம்
ஸ்ரீவாரி தெப்போற்சவம் (பழைய படம்)

திருமலையில் ஸ்ரீவாரி தெப்போற்சவம் ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2021-03-03 08:59 GMT   |   Update On 2021-03-03 08:59 GMT
திருமலையில் வருகிற 24-ந் தேதியிலிருந்து 5 நாட்கள் தெப்போற்சவம் நடக்கிறது. தெப்போற்சவத்தின் முதல் நாள் மாலை சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமச்சந்திரமூர்த்தி ஆகிய சாமிகள் புஷ்கரிணியில் தெப்பலில் வலம் வருகிறார்கள்.
திருமலையில் வருகிற 24-ந் தேதியிலிருந்து 5 நாட்கள் தெப்போற்சவம் நடக்கிறது. இதற்காக தெப்பல் தண்ணீரில் மிதக்கும் வகையில் பிளாஸ்டிக் டிரம்கள் பயன்படுத்தப்படும். அதன்படி தற்போது பிளாஸ்டிக் டிரம்கள் கொண்டுவரப்பட்டு தெப்பலில் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தெப்போற்சவத்தின் முதல் நாள் மாலை சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர், ராமச்சந்திரமூர்த்தி ஆகிய சாமிகள் புஷ்கரிணியில் தெப்பலில் வலம் வருகிறார்கள்.

2-வது நாள் கிருஷ்ணசாமி, ருக்மணியுடனும், 3-வது நாளில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், மலையப்பசாமி 3 முறை தெப்பலில் சுற்றி வந்து அருள்பாலிக்கின்றனர். நான்காவது நாளில் ஐந்து முறையும், கடைசி நாள் ஏழு முறையும் புஷ்கரிணியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
Tags:    

Similar News