ஆன்மிகம்
தேர்த்திருவிழாவையொட்டி கோனியம்மன் கோவிலில் கொடியேற்றம்

தேர்த்திருவிழாவையொட்டி கோனியம்மன் கோவிலில் கொடியேற்றம்

Published On 2021-02-24 14:57 IST   |   Update On 2021-02-24 14:57:00 IST
கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேர்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 15-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 16-ந்தேதி இரவு பூச்சாட்டு விழா நடந்தது. இதற்காக பூக்கம்பம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், அந்த கம்பம் கோவிலில் இருந்து தொடங்கி வைசியாள் வீதி, கற்பககவுண்டர் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலை அடைந்தது. கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேர்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். வருகிற 1-ந் தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். 2-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 3-ந் தேதி மதியம் 2 மணியளவில் நடக்கிறது.

Similar News