ஆன்மிகம்
நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-02-21 10:21 IST   |   Update On 2021-02-21 10:21:00 IST
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், நடைபெற்றது.

திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹரமங்களமாருதி ஆஞ்சநேயர், நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் சன்னதிகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

Similar News