ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சூரிய பிரபை வாகனத்தில் சாமி வீதி உலா

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சூரிய பிரபை வாகனத்தில் சாமி வீதி உலா

Published On 2021-02-20 13:30 IST   |   Update On 2021-02-20 13:30:00 IST
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான தேவநாதசுவாமி கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலில் தேரோட்டம், சாமி வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் முகூர்த்த நாட்களில் 50 திருமணத்திற்கு மட்டும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு திருமணம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று ரதசப்தமியை முன்னிட்டு தேவநாத சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Similar News